2013-02-19 15:43:19

டான்சானியா, வெனெசுவேலா நாடுகளில் குருக்கள் கொலை


பிப்.19,2013. ஆப்ரிக்க நாடான டான்சானியாவில் ஒருவர், இலத்தீன் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் ஒருவர் என இரண்டு கத்தோலிக்க குருக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
José Ramón Mendoza என்ற 44 வயதான அருள்பணியாளர் இஞ்ஞாயிறன்று கொலை செய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டில் இதுவரை இலத்தீன் அமெரிக்காவில் 4 குருக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், டான்சானியாவின் சான்சிபார் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவதற்காகச் சென்று கொண்டிருந்த 55 வயதான அருள்பணி Evarist Mushi என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றுரைத்த சான்சிபார் ஆயர் Augustine Shao, காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது என்று ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக உள்ளூர் தினத்தாள்களில் ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் எதிராக, கொலை மிரட்டல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் ஆயர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் அன்று சுடப்பட்ட Ambrose Mkenda என்ற அருள்பணியாளர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறிய ஆயர் Shao, 2012ம் ஆண்டில், 3 கத்தோலிக்க ஆலயங்களுக்கும் பிற கிறிஸ்தவ சபைகளின் பல ஆலயங்களுக்கும் தீ வைக்கப்பட்டன என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.