சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை ஒன்றில் போலந்து
கிறிஸ்தவத் தலைவர்கள் கையொப்பம்
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த அறிக்கை ஒன்றில், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத்
தலைவரோடு சேர்ந்து பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் முதன்முறையாக கையெழுத்திட்டுள்ளனர். கடித
வடிவில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த பொதுவான இறையியல்
கூறுகளும், சில நடைமுறைக் கூறுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இயற்கையை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்
என்பது குறித்தும், இயற்கைக்கும் நமக்கும் உள்ள உறவு எப்படி இருக்கின்றது என்பது குறித்தும்
சிந்திக்குமாறு இந்த அறிக்கை அனவைருக்கும் அழைப்பு விடுக்கிறது. போலந்து கிறிஸ்தவத்
தலைவர்கள் இணைந்து வெளியிட்ட இவ்வறிக்கை, போலந்து கிறிஸ்தவத்தின் வரலாற்றில் முதன்முறையாக
இடம்பெற்றுள்ளது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.