ஆர்டிக் பெருங்கடல் பாதுகாக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்
பிப்.19,2013. ஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகி வருவதையும், கடல்வளங்கள் அதனால்
பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, ஆர்டிக் பெருங்கடல் சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு
கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஆர்டிக்
பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகுவது அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும், 2012ம்
ஆண்டில் 34 இலட்சம் சதுர கிலோ மீட்டர் அளவில் பனிப்பாறைகள் உருகி இருப்பதாகவும் ஐ.நா.சுற்றுச்சூழல்
நிறுவனம் கூறுகிறது. உலகில் ஆய்வுகள் நடத்தப்படாத இயற்கை வாயுவில் 30 விழுக்காடு,
ஆர்டிக் பெருங்கடலில் இருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு புவியியல் புள்ளிவிபரக் கணக்கெடுப்பு
ஒன்று கூறுகிறது.