2013-02-19 15:39:00

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாபெரும் சுற்றுச்சூழல் பேரணி


பிப்.19,2013. தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த பேரணி ஒன்றை நடத்தினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏறக்குறைய 50 ஆயிரம் மக்கள், மனிதரால் ஏற்படுத்தப்படும் இப்பூமியின் வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தினர்.
சமய மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த குழுக்களினால் இஞ்ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி, அந்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரிய சுற்றுச்சூழல் பேரணி என்று சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.