2013-02-18 15:49:07

பாகிஸ்தான் முன்னாள் ஆயர் லோபோ இறைபதம் சேர்ந்தார்


பிப்.18,2013. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி முன்னாள் ஆயர் ஆன்டனி லோபோ இத்திங்கள் காலை இறைபதம் சேர்ந்தார்.
1937ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி கராச்சியில் பிறந்த இவர், 1961ம் ஆண்டு அதே உயர்மறைமாவட்டத்தின் குருவாகவும், 1982ம் ஆண்டு அங்கேயே துணை ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1993 முதல் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டியின் ஆயராக நியமிக்கப்பட்ட ஆயர் ஆன்டனி லோபோ, 17 ஆண்டுகள் சிறப்பான பணியாற்றி, 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி உடல்நிலை காரணமாக பணிஓய்வு பெற்றார்.
கடந்த சிலகாலமாக உடல்நலமற்றிருந்த ஆயர் லோபோ, இத்திங்களன்று காலை இறைபதம் சேர்ந்தார். இவரின் அடக்கச் சடங்கு இராவல்பிண்டி புனிதவளன் பேராலயத்தில் பிப்ரவரி 20ம் தேதி, புதனன்று இடம்பெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.