மரண தண்டனை நிறுத்தப்படுமாறு இந்தியக் கிறிஸ்தவர்கள் அழைப்பு
பிப்.16,2013. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவேளை,
மனித வாழ்வு புனிதம் நிறைந்தது என்று சொல்லி, இத்தண்டனை முற்றிலும் நிறுத்தப்படுமாறு
இந்தியக் கத்தோலிக்க அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய
Afzal Guruக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம்
பேசிய, CSF என்ற இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர் அமைப்பின் தலைவர் ஜோசப் டயஸ், இந்தியாவில்
மரணதண்டனைகள் முற்றிலுமாக நிறுத்தப்படுமாறு கேட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
பொது அவையில் அண்மையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 110 நாடுகள் மரணதண்டனைகள் முற்றிலும்
நிறுத்தப்படுமாறு அழைப்புவிடுத்தன என்றும், இந்தியா உட்பட 39 நாடுகள் மரணதண்டனைக்கு ஆதரவு
தெரிவித்தன எனவும் டயஸ் தெரிவித்தார். 2001க்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்
இந்தியாவில் 1,455 பேருக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கர்நாடகாவிலும்
முறையே 95, உத்தரபிரதேசத்தில் 370, பீஹாரில் 132, மகராஷ்டிராவில் 125, மத்திய பிரதேசத்தில்
87, ஜார்க்கண்டில் 81 என மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.