2013-02-16 15:25:58

சென்னையில் சுற்றுச்சூழல் மாநாடு


பிப்.16,2013. சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 14வது ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னையில் இச்சனிக்கிழமை காலையில் தொடங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீனா, பிரேசில், பூட்டான், அர்ஜென்டினா, பியூஜி தீவுகள், நாரு, கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
பருவநிலை மாறுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றது.
சென்னையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.