2013-02-16 15:21:17

சிரியாவில் இரண்டு குருக்கள் கடத்தப்பட்டுள்ளனர்


பிப்.16,2013. சிரியாவில் ஓர் அர்மேனியக் கத்தோலிக்கக் குரு, ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குரு என இருவர் அந்நாட்டுப் புரட்சிப் படைவீரர்களால் கடத்தப்பட்டுள்ளனர் என, அலெப்போவின் அர்மேனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறினார்.
அலெப்போவிலிருந்து தமாஸ்குச் செல்லும் சாலையில் வாகனத்தில் இவ்விரு குருக்களும் ஆயுதம் ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளனர் என, பேராயர் Marayati மேலும் கூறினார்.
இந்தக் கடத்தலுக்கான காரணம் தெரியவில்லை என்றும், கடத்தியவர்கள் 1 இலட்சத்து 60 ஆயிரம் யூரோக்களைப் பிணையல் தொகையாகக் கேட்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளன என்றும் பேராயர் Marayati கூறினார்.







All the contents on this site are copyrighted ©.