நேர்காணல் – திருத்தந்தையின் பதவி விலகல் மற்றும் CCBI கூட்டம்
பிப்.14,2013. அன்பர்களே, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இம்மாதம் 28ம் தேதி உரோம்
நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தத் திடீர் அறிவிப்பைக்
கேட்ட பின்னர் உலகின் சமய மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து
வருகின்றனர். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களின், திருத்தந்தையின்
இவ்வறிவிப்பு குறித்த எண்ணத்தை அறிவதற்குத் தொலைபேசியில் அவரை அழைத்தோம். ஆயர் பீட்டர்
ரெமிஜியுஸ் அவர்கள், தமிழக ஆயர் பேரவையின் தலைவர்