பிப்.13,2013. தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, மற்றும் கணனித் தொழில்நுட்பம் ஆகியவை இணைந்துவருவது
தொடர்புகளில் புரட்சியை உருவாக்குகிறது என ITU எனப்படும் அகில உலக தொலைத்தொடர்பு ஒன்றியத்தின்
பொதுச்செயலர் Hamadoun Touré கூறினார். 1946ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி, ஐ.நா.வானொலி
உருவாக்கப்பட்டதன் நினைவாக, கடந்த ஆண்டு ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனமான
UNESCO, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி நாள் என அறிவித்தது. உலக வானொலி நாளின் முதல்
ஆண்டு நாள் நிகழ்வையொட்டி, இச்செவ்வாயன்று ஜெனீவாவில் ITUவின் அறிக்கையை வெளியிட்ட Touré,
வானொலியின் தாக்கம் குறித்துப் பேசினார். தொடர்புத்துறையில் உலகம் வியத்தகு வழிகளில்
முன்னேற்றம் கண்டிருந்தாலும், தொடர்பு உலகில் வானொலி இன்னும் ஒரு சிறப்பு இடம் வகிக்கிறது
என்று ITUவின் இவ்வறிக்கை கூறுகிறது.