அருள்தந்தை லொம்பார்தி : இளையோரின் வாழ்வில் ஒன்றாகக் கலக்க வேண்டும்
பிப்.09,2013. இன்றைய இளையோரின் கலாச்சாரப்போக்கு குறித்து சிந்தித்தால் மட்டும் போதாது,
மாறாக, அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களது வாழ்வில் ஒன்றாகக் கலக்க வேண்டுமென வத்திக்கான்
வானொலி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். இக்காலத்தில்
வேகமாக இடம்பெற்றுவரும் மாற்றங்களால் தங்களது மனநிலை, நடத்தை, வாழ்க்கைப் போக்கு ஆகியவற்றில்
தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்திவரும் இளையோரைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால்,
அவர்களைப் புரிந்துகொள்வதற்கு அவர்களது வாழ்வில் ஒன்றாகக் கலக்கவேண்டும் என்று கூறினார்
அருள்தந்தை லொம்பார்தி. எப்பொழுதும் மாறிக்கொண்டுவரும் இன்றைய உலகில் இளையோரின் கேள்விகளுக்குப்
பதில் சொல்லவேண்டும், அவர்களது இதயங்களையும் மனநிலைகளையும் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும்
உள்ளது எனவும் அவர் கூறினார்.