புதிய பாம்பு ஆண்டை முன்னிட்டு தாய்வான் கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு இலவச உணவு
பிப்.08,2013. சீனப் புத்தாண்டு தொடங்கவிருப்பதையொட்டி, தாய்வானிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ
நிறுவனங்களும் கழகங்களும் ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு இலவச உணவுகளை வழங்கி
வருகின்றன. இம்மாதம் 10ம் தேதியன்று பாம்பு ஆண்டு என்ற பெயரில் தொடங்கும் சீனப் புத்தாண்டை
முன்னிட்டு. தாய்பேய் நகரின் சமூகநல நிறுவனம், தாய்வான் முழுவதும் 30 ஆயிரம் பேருக்கு
இலவச உணவுகளை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம்
பேசிய தாய்பேய் நகர அருள்பணி மத்யூ, இந்த இலவச உணவு விருந்து தாய்வானின் 14 பகுதிகளில்
நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.