2013-02-06 16:02:39

குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட அன்னை தெரேசா புத்தகம்


பிப்.06,2013. CTS (Catholic Truth Society) எனப்படும் கத்தோலிக்க உண்மைக் கழகம் முத்திபேறு பெற்ற அன்னை தெரேசா மற்றும் புனித கிளாரா ஆகியோரின் வாழ்வை விளக்கும் இரு புத்தகங்களைக் குழந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது.
5 வயது முதல் 7 வயது முடிய உள்ள குழந்தைகள் படித்து பயன்படக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்நூல்கள் வரிசையில் ஏற்கனவே புனித யோசேப்பு, புனித ஜான் மரியா வியான்னி, முத்திபேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் வெளியாகியுள்ளன.
Elena Pascoletti என்பவரால் எழுதப்பட்டு, Giusi Capizzi என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள அன்னை தெரேசாவின் கதை, அல்பேனியாவில் வளர்ந்த அவர் குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது.
எளிதான வகையில் புனிதர்களின் வாழ்வை வழங்குவதால், குழந்தைகளை விசுவாச வாழ்வில் வளர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் இந்நூல்களின் வரிசை வெளியிடப்படுவதாக ICN கத்தோலிக்க செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.