2013-02-06 16:01:08

இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் கடைபிடித்த துக்க நாட்கள்


பிப்.06,2013. பிப்ரவரி 4, இத்திங்களன்று இலங்கையில் கொண்டாடப்பட்ட 65வது சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களைத் துக்க நாட்களாகக் கடைபிடித்தனர்.
ஆங்கலிக்கன் கிறிஸ்தவ சபையால், கொழும்புவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 2000க்கும் அதிகமானோர் அனைவரும் வெள்ளை உடை அணிந்து தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் புத்தமதக் குருக்கள், கத்தோலிக்க குருக்கள் மற்றும் அருள்சகோதரிகளும் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டில் உண்மையான விடுதலை நிலவுகிறது என்பதற்கு ஓர் அடையாளம் என்று கொழும்புவில் உள்ள ஆங்கலிக்கன் ஆயர் Dhiloraj Canagasabey கூறினார்.
இலங்கையில் தற்போது நிலவும் பாகுபாடுகள் நிறைந்த நிலையைக் கண்டு, கிறிஸ்தவர்கள் அமைதி காப்பது, நமது கிறிஸ்தவ நிலைப்பாட்டைக் காட்டிக் கொடுக்கும் வழியாகும் என்று ஆயர் Canagasabey எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.