2013-02-05 16:06:56

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வில் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து துறவிகள் கலந்துரையாடல்


பிப்.05,2013. துறவு சபைகள் தங்களின் தனித்துவத்தில் வளருவதற்கு முயற்சிகளை எடுக்குமாறு இந்தியத் துறவு சபைகளின் ஏறக்குறைய 600 உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இஞ்ஞாயிறன்று மங்களூருவில் அனைத்துலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு தினத்தைச் சிறப்பித்த ஏறக்குறைய 600 இருபால் துறவியர், படைப்பாற்றல்திறனுடன் தங்களது துறவற அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர்.
மற்றவரோடு குழுவாக வாழ்வதும், சுதந்திரம், சகோதரத்துவம், நீதி ஆகியவை நிறைந்த குழுக்களைக் கட்டி எழுப்புவதுமே துறவு வாழ்வு என்றுரைத்த அருள்சகோதரி ஜெசி மெர்லின், துறவிகள் தங்களது இறைவாக்குரைக்கும் மற்றும் தியானயோகக் கூறுகளைக் கண்டுணருமாறு கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.