குடும்பங்களுக்கானத் திருப்பீடஅவையின் இவ்வாண்டு திட்டங்கள்
பிப்.04,2013. குடும்பங்கள் குறித்த பல கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களுக்கு, இவ்வாண்டில்
திட்டமிடப்பட்டுள்ளதாக, குடும்பத்திற்கானத் திருப்பீட அவை அறிவித்து, அதன் விவரங்களை
வெளியிட்டுள்ளது. இம்மாதம் 15ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க்கில் 'குடும்பம்
சமூகத்தின் ஆதாரம்' என்ற தலைப்பிலும், மார்ச் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்
'பாரம்பரியகுடும்பங்களுக்குச் சட்டரீதியான, சமூகரீதியானபாதுகாப்பு வழங்குவதன் மூலம் மனிதஉரிமைகளையும்
விடுதலையையும் ஊக்குவித்தல்' என்றதலைப்பிலும் கருத்தரங்குகள் இடம்பெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்தகலந்துரையாடல்கள் ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகியமாதங்களில்
இடம்பெறும் எனவும், குடும்பங்களின் உரிமைகள் குறித்தஉயர்மட்டகருத்தரங்கு செப்டம்பரில்
Strasburgல் இடம்பெறும் எனவும் அறிவிக்கிறது திருப்பீடத்தின் குடும்பங்களுக்கானஅவை. உரோம்
நகரின் தூய பேதுரு கல்லறையைத் தரிசிக்க, குடும்பங்கள் மேற்கொள்ளும் திருப்பயணம், 'குடும்பங்கள்
விசுவாசமகிழ்வை வாழ்தல்' என்ற மையக் கருத்துடன் அக்டோபர் 26, 27 தேதிகளில் இடம்பெறும்
எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.