2013-02-04 15:52:04

இந்தியாவில் காணமற்போகும் குழந்தைகள் ஆண்டிற்கு 60,000


பிப்.04,2013. இந்தியாவில் ஆண்டிற்கு 60,000க்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமற்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு வேலைக்காக, அண்மையில் ஜார்க்கண்டிலிருந்து டில்லிக்கு கடத்தி வரப்பட்ட 11 வயது சிறுமி, தன்னார்வத் தொண்டு அமைப்பினரால் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் நடத்திய ஆய்வில், நாட்டில் ஆண்டிற்கு 60,000க்கு மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து காணாமற் போகின்றனர் என்பது தெரிய வந்துள்து.
டில்லியில் கல்லூரி மாணவி, பாலியல் வன்கொமைக்கு உடபடுத்தப்பட்டு பலியான விவகாரத்தையடுத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதுச்சட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழு, குழந்தைகள் காணாமற் போவது குறித்து கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.