பிப்.02,2013. காலங்களின் அடையாளங்களைக் கண்டுகொள்வதற்குத் தூய ஆவியின் பள்ளியில் பயிலுமாறு,
பெங்களூரு தர்மாரம் பாப்பிறைக் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வோரைக்
கேட்டுக் கொண்டார் திருப்பீட கல்வி பேராயத்தின் தலைவர் கர்தினால் Zenon Grocholewski.
“இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50 ஆண்டுகள்” என்ற தலைப்பில் பெங்களூருவில்
நடைபெற்றுவரும் 4 நாள் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Grocholewski, காலங்களின்
அடையாளங்களைக் கண்டுணர்ந்து அவற்றின்படி செயல்பட்டால்மட்டும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்
போதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று கூறினார். கிறிஸ்துவின் சீடர்கள், இவ்வுலகின்
அடையாளங்களில் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் அடையாளங்களைக் காண வேண்டுமெனவும் கூறினார்
கர்தினால் Grocholewski. இவ்வியாழனன்று தொடங்கிய இம்மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.