2013-02-01 15:48:39

மாலி நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவது தேசிய அளவிலான ஒப்புரவு, ஆயர்கள்


பிப்.01,2013. தற்போது மாலி நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவது தேசிய அளவிலான ஒப்புரவே என்று அந்நாட்டு ஆயர்கள் கருதுவதாக, அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுச்செயலர் அருள்பணி Edmond Dembele கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் இடைக்கால அரசுத்தலைவரைச் சந்தித்துப் பேசிய ஆயர்கள் அந்நாட்டின் தேசிய ஒப்புரவு குறித்த விவகாரங்களில் உடனடியாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர் என்று அருள்பணி Edmond மேலும் கூறினார்.
மாலி நாட்டின் வடக்கில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒப்புரவையும், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளுதலையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் ஆயர்கள், இடைக்கால அரசுத்தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஷாரியா இசுலாமியச் சட்டத்தை நாடெங்கும் கொண்டுவரும் நோக்கத்தில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுவரும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டுவரும் மாலி இராணுவத்துக்குப் பிரான்ஸ் தனது படைகளை அனுப்பி உதவி வருகிறது.








All the contents on this site are copyrighted ©.