சன.31,2013. அன்பர்களே, கடந்த டிசம்பரில் டெல்லியில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி
ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்தார். இதையடுத்து பெண்களுக்குப் பாதுகாப்புக்
கோரி, நாடு தழுவிய போராட்டங்களும் இடம்பெற்றன. இவ்வாண்டில் தமிழக அரசு, பெண்களின் சிறகுகள்
என்ற அமைப்பை உருவாக்கி பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, தமிழகத்தின் நாகர்கோவில் தலைமைக் காவலர் சி.இரவீந்தரன் அவர்களைத் தொலைபேசியில்
அழைத்து இந்த பெண்களின் சிறகுகள் அமைப்பு செயல்படும் விதம் குறித்த விபரங்களைக் கேட்டோம்.