2013-01-31 15:45:08

நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் - அலெப்போ பேராயர் Marayati


சன.31,2013. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சிரியாவில் நிலவிவரும் வன்முறைகள் நிறைந்த வாழ்வுநிலை, பயங்கரங்கள் மீது பற்றுகொள்ளும் ஆபத்தான பழக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது என்று அலெப்போவின் ஆர்மீனியக் கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறினார்.
அலெப்போ நகரில் இச்செவ்வாயன்று பல இளையோர் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பேராயர் தன் வருத்தத்தை இவ்வாறு வெளியிட்டார்.
ஒரு சில நாட்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலைகள் ஏற்கனவே ஒரு தூரத்து நினைவாக மாறுமளவுக்கு, ஒவ்வொரு நாளும் வெவ்வேறான பயங்கரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று பேராயர் Marayati, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒவ்வொரு வன்முறையின்போதும் வெளிவரும் தகவல்களை சரிவர ஆய்வு செய்வதற்குள் அடுத்தடுத்து வன்முறைகள் நிகழ்வதாலும், உண்மையும் வதந்திகளும் கலந்து வருவதாலும், நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் என்று பேராயர் Marayati சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.