நைஜீரியாவில் Boko Haramகுழுவின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக்
களைய முன்வந்துள்ளனர்
சன.30,2013. புனிதப் போர் என்ற பெயரில் ஆப்ரிக்காவின் நைஜீரியாவில், வன்முறைகளில் தொடர்ந்து
ஈடுபட்டு வரும் Boko Haram என்ற குழுவினரின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளதாக
அந்நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது. Borno என்ற பகுதியில் உள்ள Boko Haram
குழுவினரின் தலைவர் Sheikh Abu Mohammad இம்முடிவை இத்திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார். பல
கிறிஸ்தவ கோவில்களையும், நடுநிலையான இஸ்லாமிய அமைப்புக்களையும் தாக்கி வந்த Boko Haram,
தங்கள் குழுவைச் சேர்ந்த கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி அரசு விடுவிக்க வேண்டும் என்றும்
விண்ணப்பித்துள்ளது. தங்கள் நடவடிக்கைகளால், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாமியப்
பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே தங்கள் முடிவுக்குக் காரணம் என்று
இக்குழ்வின் தலைவர் Abu Mohammad எடுத்துரைத்தார்.