2013-01-28 15:59:35

பிரேசில் நாட்டிற்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி


சன.28,2013. பிரேசில் நாட்டின் தென் நகரமான சாந்தா மரியாவின் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 231 இளையோர் உயிரிழந்தையொட்டி திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தி அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சாந்தா மரியா நகரின் பேராயர் DOM HÉLIO ADELAR RUBERTக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ளசெய்தி, இறந்தோரின் ஆன்மசாந்திக்காகத் திருத்தந்தையின் செபத்திற்கு உறுதி கூறுவதோடு, தங்கள் உறவினர்களைத் தீ விபத்தில் இழந்து துயருறும் மக்களுக்குத் திருத்தந்தையின் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்கின்றது.
இத்தீவிபத்தில் 231பேர் பலியானதைத்தொடர்ந்து பிரேசில் அரசு மூன்று நாட்களை தேசியதுக்கநாட்களாக அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.