சன.25,2013. இலங்கையில், சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாகப் பாடப்பட்டு
வரும் தேசியப் பண்ணை, இரு மொழிகளையும் கலந்து ஒரு புதிய வடிவிலான தேசியப் பண் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்
தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரங்கள் அமைச்சகத்தின் முயற்சியினால்
தயாரிக்கப்பட்டுள்ள இப்புதியப் பண், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பார்வைக்கு அனுப்பபட்டு,
அதன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இருமொழி
கலந்த இந்த தேசியப் பண் அமலுக்கு வர, இலங்கையில் ஓர் அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படலாம்
என்று கூறிய அமைச்சர் நாணயக்கார, நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை இப்போது அரசுத்தலைவருக்கு
அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.