2013-01-24 15:50:59

தமது மகளை கொலை செய்யச் சொன்ன சவுதி பெற்றோரை மன்னித்தோம்: ரிசானாவின் தாயார்


சன.24,2013. தமது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியோருக்கு Shari-ah சட்டத்தின்படி தாம் மன்னிப்பை வழங்குவதாக சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட Rizana Nafeekன் தாயார் தெரிவித்துள்ளார்.
Rizanaவினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோர், Rizanaவை மன்னிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் சவுதி அரசு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இஸ்லாமிய மதத்தின் Shari-ah சட்டத்தின்படி, தமது மகளுக்கு மன்னிப்பு வழங்காத சவுதி பெற்றோருக்கு, தாம் மன்னிப்பை வழங்குவதாக Rizanaவின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
Rizanaவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக சவுதி அரசு தமக்கு எவ்விதத் தகவலும் தரவில்லை என்றும், ஊடகம் மூலமே தமது மகளின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை தெரிந்துக்கொண்டதாகவும் Rizanaவின் தாய் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.