2013-01-23 15:37:40

இன்னும் ஐந்து ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை 21 கோடியாக உயரும் - ILOவின் புதிய அறிக்கை


சன.23,2013. 2012, மற்றும் 2013ம் ஆண்டுகளில் வேலையில்லா நிலை கூடுதலாகும் என்று ஐ.நா.வின் அகில உலகத் தொழில் அமைப்பான ILOவின் புதிய அறிக்கை கூறுகிறது.
வேலையற்றவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டு 42 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், தற்போதைய நிலைப்படி, உலகெங்கும் 19 கோடியே 70 இலட்சம் பேர் வேலையின்றி உள்ளனர் என்றும் ILO இச்செவ்வாயன்று வெளியிட்ட இவ்வறிக்கை கூறுகிறது.
வேலையற்றோரில் 7 கோடியே 40 இலட்சம் பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இந்நிலை தொடர்ந்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை 21 கோடியாக உயரும் என்றும், இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சரிசெய்ய உலக அரசுகள் சரியான முயற்சிகள் மேற்கொள்ளாததால், இந்த நிலை உருவாகியுள்ளது என்று இவ்வறிக்கையைச் சமர்ப்பித்த ILO தலைமை இயக்குனர் Guy Ryder கூறினார்.








All the contents on this site are copyrighted ©.