இங்கிலாந்தில் வறியோர் மற்றும் வீடற்றோரை மரியாதையற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கும்
ஒரு வார முயற்சி
சன.23,2013. மனிதர்களை, முக்கியமாக, வறியோரை விசுவாசக் கண்கள் கொண்டு நோக்கும்போது, அவர்களில்
இறைவனைக் காணமுடியும், எனவே, அவர்களைப்பற்றி அவசரத் தீர்ப்புகளைச் சொல்வது தவிர்க்கப்படும்
என்று இங்கிலாந்து பேராயர் Bernard Longley கூறினார். வறியோர் மற்றும் வீடற்றோரை மரியாதையற்ற
முறையில் நடத்துவதைத் தடுக்கும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும்
இணைந்து பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் ஒரு வார முயற்சியொன்றை மேற்கொள்ளவிருக்கின்றன. இந்த
முயற்சி குறித்து பேசிய Birmingham பேராயர் Longley, ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை
மாண்பை ஏற்றுக்கொள்வதே கிறிஸ்தவ வழிமுறை என்று எடுத்துரைத்தார். 'முதல் கல்லை உன்னால்
ஏறிய முடியுமா?' என்ற மையக் கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த ஒரு வார முயற்சியில், வறியோரை
ஊடகங்கள் சித்தரிக்கும் தவறான போக்கிற்கு மாற்று வழிகள் தேடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்
தற்போது வளர்ந்து வரும் பொருளாதாரச் சரிவுக்கு வறியோரும், வீடற்றோரும் காரணம் என்ற தவறான
கருத்து பரவி வருவதாகவும், இக்கருத்தைச் சரிசெய்ய கிறிஸ்தவ சபைகள் இணைந்துவரும் என்றும்,
இம்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர் Alison Gelder கூறினார்.