2013-01-23 15:37:18

அயல்நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் - Rizana Nafeekன் தாய்


சன.23,2013. என் மகளைப் போல அயல்நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் என்பது ஒன்றே என் விண்ணப்பம் என்று Rizana Nafeekன் தாய் கூறியுள்ளார்.
குழந்தை ஒன்றைக் கொன்றார் என்று Rizana Nafeek என்ற இளம்பெண் தீர்ப்பிடப்பட்டு, சவுதி அரேபியாவில் இம்மாதம் 9ம் தேதி தலைவெட்டப்பட்டு இறந்தார்.
இந்தக் கொடூரத் தண்டனையை அடுத்து, Rizana Nafeekன் தாய் Seeiadu Ahammaddu Rezeenaவுக்கு பண உதவிகள் அளிக்கப்பட்டபோது, அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த Rezeena, அயல் நாடுகளில் பணிசெய்யும் இலங்கைப் பெண்களுக்கு அரசு தகுந்த உதவிகள் செய்யவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.
Rezeena அரசுக்கு அனுப்பியுள்ள விண்ணப்பத்தை வடிவமைத்த கண்டி மறைமாவட்ட மனித உரிமைப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை Nandana Mantunga, சவுதி அரேபியாவில் நிகழ்ந்தது மனித குலத்திற்கே இழைக்கப்பட்ட ஓர் அவமானம் என்று கூறினார்.
மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற காரணம் காட்டி, இலங்கை அரசு Rizana Nafeekன் வழக்கில் நீதியான முறையில் ஈடுபடவில்லை என்றும் அருள்தந்தை Mantunga சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.