2013-01-22 15:39:45

அமைதிக்காக மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க முன்வருமாறு டெல்லி பேராயர் வேண்டுகோள்


சன.22,2013. மேம்பட்ட ஓர் உலகை கட்டியெழுப்ப அனைத்து மதங்களும் கைகோர்த்து ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் புதுடெல்லியின் புதிய பேராயர் Anil Jose Thomas Couto
மோதல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகள் சுரண்டப்படல் மற்றும் இலஞ்ச ஊழல்களால் பாதிப்படைந்திருக்கும் இவ்வுலகில் அமைதியையும் இணக்க வாழ்வையும் கொணர மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியம் என்றார் பேராயர்.
மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டும் போதாது, மதங்கள் கற்பிக்கும் மதிப்பீடுகளின்படி செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்றார் பேராயர் Thomas Couto.
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முயலும்போதே, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் பலனுள்ளதாக மாறும் என மேலும் கூறினார் டெல்லி பேராயர்.








All the contents on this site are copyrighted ©.