2013-01-21 15:40:54

தகவல் அறியும் சட்டத்தை நிறைவேற்றுமாறு பிலிப்பீன்ஸ் அரசுக்கு தலத்திருஅவை வேண்டுகோள்


சன.21,2013. தகவல் அறிவதற்கான உரிமையை தரும் சட்டம் பிலிப்பீன்ஸ் காங்கிரஸ் அவையில் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் எனவும், அதன் வழியாகத்தான் மக்கள் பொதுநலன் குறித்த தகவல்களை அரசிடம் இருந்து பெறமுடியும் எனவும் விண்ணப்பித்தார் அந்நாட்டின் கத்தோலிக்க சமூக நடவடிக்கைச் செயலகத்தின் தலைவர் ஆயர் Broderick Pabillo.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றி, அதை அமல்படுத்துவது மக்களுக்கே உதவுவதாக இருக்கும் என்று கூறிய ஆயர், இதன் வழி சமூக நீதி முன்னேற்றம் பெறும் எனவும் தெரிவித்தார்.
இச்சட்டத்தை அரசு நிறைவேற்றத் தவறினால், அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதோடு, வரும் தேர்தலிலும் தன் பாதிப்பை வெளிப்படுத்தும் என்றார் ஆயர் Pabillo.








All the contents on this site are copyrighted ©.