ஈராக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான கிறிஸ்தவ மையம்
சன.21,2013. ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதைக்
கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக கிறிஸ்தவ கலாச்சார மையம் ஒன்றை
துவக்கியுள்ளது தலத் திருஅவை. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகங்களிடையே தொடர்புகளை அதிகரிக்கும்
நோக்கில் நாட்டின் வடபகுதியிலுள்ள கிர்குக் நகரில் துவக்கப்பட்டுள்ள இந்த மையம் 2003ம்
ஆண்டிற்குப்பின் துவக்கப்பட்டுள்ள முதல் மையம் எனவும், இது அமைதியின் செய்தியை வழங்குவதோடு,
பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க உதவும் என்றார் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ. 2003ம்
ஆண்டு அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு முன்னர் 10 இலட்சத்திற்கும் அதிகமாக இருந்த
ஈராக் வாழ் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 4 இலட்சத்து, 50 ஆயிரமாக குறைந்துள்ளது.
2003க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈராக்கில் 900 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
200பேர் பிணையத்தொகைக்காக கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.