சன.19,2013. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஒவ்வொரு நாளும் 2 பாலியல் வன்கொடுமைகள்
சார்ந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்றும், 2012ம் ஆண்டில் இவ்வழக்குகள் 23 விழுக்காடு
அதிகரித்துள்ளன எனவும் டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், 2012ம் ஆண்டில் டில்லியில்
706 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியதாகவும், இது 2011ம் ஆண்டின் அளவான 572 பாலியல்
பலாத்கார வழக்குகளைவிட 23.43 விழுக்காடு அதிகம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த
டிசம்பர் மாதம் 29ம் தேதி 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்முறையால்
பாதிக்கப்பட்டு இறந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் டில்லியில்
தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும் காவல்துறை கூறியது.