2013-01-19 15:16:07

திருத்தந்தை : திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள், மனித மாண்பையும் திருமணத்தையும் ஊக்குவிக்க அழைப்பு


சன.19,2013. மனிதரின் ஒருங்கிணைந்த ஆளுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கடும் கருத்துக்கோட்பாடுகளுக்குத் திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள் பாராமுகமாய் இருப்பதை எச்சரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அத்தகைய கோட்பாடுகளுடன் செயல்படும் நிறுவனங்களுடன் திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள் ஒத்துழைப்பதற்கு எதிராகவும் பேசினார் திருத்தந்தை.
“Cor Unum” என்ற திருப்பீடப் பிறரன்புப் பணிகளுக்கான அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களின் கடமை குறித்து எடுத்துரைத்தார்.
மனிதர் குறித்த உலகாயுதக் கண்ணோட்டத்துக்கும், மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையேயுள்ள ஒன்றிப்பை மனிதயியலாக நோக்குவது வளர்ந்து வருகிறது என்ற திருத்தந்தை, இந்நிலை, மனிதர் கடவுளோடு கொள்ளும் உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எச்சரித்தார்.
திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள், மனித மாண்பையும் திருமணத்தையும் ஊக்குவிக்கவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.