2013-01-18 15:17:29

கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவரின் உதவிக்கு விண்ணப்பம்


சன.18,2013. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரத்தைக் காக்கவும், சிறையிலுள்ள இரண்டு பத்திரிகையாளர்கள் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்யவும் அரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டுமென்று ஒரு கிறிஸ்தவக் குழு கேட்டுள்ளது.
பிஜேபி கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தின் நிலைமை குறித்து அரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புமாறு, கர்நாடக ஆளுனர் Bhardwaj ஐக் கேட்டுள்ளார் CSF என்ற கிறிஸ்தவக் குழுவின் பொதுச் செயலர் Joseph Dias.
குறிப்பாக, இரண்டு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டது, பத்திரிகைச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் நெறிக்கப்படுவது ஆகியவை குறித்து அரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புமாறு வலியுறுத்தியுளார் Dias.
இரண்டு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் வேலைநீக்கம் செய்யப்படுமாறும் Dias கோரியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.