மெக்சிகோவில் ஏறக்குறைய 30 இலட்சம் சிறார் அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர்
சன.15,2013. மெக்சிகோவில் ஏறக்குறைய 30 இலட்சம் சிறார், குழந்தைத் தொழில் என்ற வடிவில்
சுரண்டப்படுகிறார்கள், வியாபாரம் செய்யப்படுகிறார்கள், பாலியல்ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்
மற்றும் அடிமைத்தனத்தில் வாழ்கின்றார்கள் என ஊடகங்கள் கூறுகின்றன. ப்த்து கோடிக்கு
மேற்பட்ட மக்களைக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில், இரண்டு கோடிப் பேர் வீட்டு
வேலை செய்கின்றனர், இவர்களில் குறைந்தது 20 இலட்சம் பேர் சிறுமிகள் எனவும் ஊடகங்கள் கூறுகின்றன.
30 இலட்சம் பேர் மோசமான நிலைகளில் வேலை செய்கின்றனர், 33 விழுக்காட்டினர் வாரத்துக்கு
35 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்கின்றனர், 10 விழுக்காட்டினருக்கு நிலையான வேலை நேரம்
கிடையாது எனவும் ஊடகங்கள் கூறுகின்றன.