2013-01-15 15:48:53

ஆயுதங்களைச் சரணடையச் செய்த நிகழ்ச்சிக்கு உதவி செய்த மெக்சிகோ உயர்மறைமாநிலத்துக்கு அரசு நன்றி


சன.15,2013. மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகரில் குவாதலூப்பே அன்னைமரியா பசிலிக்கா வளாகத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஆயுதங்களைச் சரணடையச் செய்த நிகழ்ச்சிக்கு உதவி செய்த மெக்சிகோ நகர் உயர்மறைமாநிலத்துக்கு அரசு அதிகாரி ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்து நிருபர்களிடம் பேசிய ஆளுனர் Miguel Angel Mancera, மெக்சிகோ மக்கள் மத்தியில் அமைதிக்கான ஏக்கம் இருப்பதையே இது காட்டுகின்றது என்று கூறினார்.
ஆயுதங்களைச் சரணடையச் செய்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மெக்சிகோ நகர் கர்தினால் Norberto Rivera, மெக்சிகோ நாட்டில் பரவலாக இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரத்தால், வன்முறையும் நாடெங்கும் பரவியுள்ளது என்று கூறினார்.
மேலும், ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட இத்தகைய சமூக விவகாரத்தில் தலத்திருஅவை ஒதுங்கி இருக்க முடியாது என்றும் கர்தினால் Rivera தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.