திருத்தந்தை : பணி உட்படவாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் இறை அன்பிற்குச் சாட்சி பகருங்கள்
சன.14,2013. திருத்தந்தையையும், அப்போஸ்தலர்களுள் தலைமையானவரான தூய பேதுருவின் கல்லறையையும்
தரிசிக்க வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளையும் சுற்றுலாப் பயணிகளையும்
நன்முறையில் வரவேற்று ஆற்றிவரும் பணிகளுக்கென தன் பாராட்டைத் தெரிவிப்பதாக வத்திக்கான்
நகர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புத்தாண்டு
வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வண்ணம் வத்திக்கான் காவல்துறை அதிகாரிகளை இத்திங்களன்று
திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியதிருத்தந்தை, தான் உரோம் மறைமாவட்டஆயர் என்றவகையில்
பங்குதளங்களைச் சந்திக்கச் செல்லும்போதும், இத்தாலியில் திருப்பயணம் மேற்கொள்ளும்போதும்,
காவல்துறை அதிகாரிகள் ஆற்றும் சிறப்புச் சேவையைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். உறுதியானகிறிஸ்தவவிசுவாசத்தால்
தூண்டப்பட்டு இவர்கள் ஆற்றும் பணியிலிருந்து பிறக்கும் உயரிய மதிப்பீடுகள் மற்றவர்களுக்கும்
வழங்கப்படட்டும் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை. தங்கள் பணி உட்படவாழ்வின் அனைத்துச்
சூழல்களிலும் இறை அன்பிற்கு சாட்சிபகரஇந்தநம்பிக்கை ஆண்டில் அழைப்புப் பெற்றுள்ளதையும்
காவல்துறை அதிகாரிகளிடம் எடுத்தியம்பினார் பாப்பிறை.