சன12,2013. இந்திய ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் சனவரி 12,
இச்சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி கொல்கத்தாவில்
பிறந்த சுவாமி விவேகானந்தர், இந்து மதத்தத்துவங்களை, அதிலும் குறிப்பாக வேதாந்த சிந்தனைகளை
மேற்குலகுக்கு கொண்டு சென்றவர்களுள் முதன்மையானவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். அமெரிக்க
ஐக்கிய நாட்டின் சிகாகோவில் 1893ம் ஆண்டு நடைபெற்ற உலக சமயப் பிரதிநிதிகள் கூட்டத்தில்
அவர் ஆற்றிய உரை இன்றளவும் பெருமையாகப் பேசப்படுகிறது. இராமக்கிருஷ்ண பரமஹம்ஷரின்
சீடரான விவேகானந்தர், தனது குருவின் பெயரில் கல்வி, மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இராமகிருஷ்ணா
மிஷனை நிறுவினார். கிறிஸ்தவ மதப்பாணியில் அது இறைத் தொண்டுடன், மக்கள் தொண்டையும் ஆற்றி
வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் விவேகானந்தரின் பேச்சாலும்
எழுத்தாலும் கவரப்பட்டதாகக் கூறியுள்ளனர்.