2013-01-11 15:31:54

பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தேசியமயமாக்கப்படவுள்ளன


சன.11,2013. பங்களாதேஷில் கத்தோலிக்கப் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து அரசு-சாரா ஆரம்பப் பள்ளிகளைத் தேசியமயமாக்கத் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அரசின் இத்திட்டம் அடுத்த சனவரியில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்த பங்களாதேஷின் ஆரம்பக் கல்வி அமைச்சகம், ஆண்டுக்கு 1,200 கோடி டாக்கா பணத்துக்கும் மேற்பட்ட செலவில் முழுவதும் அரசின் உதவியுடன் இயங்கும் 26,193 அரசு-சாரா ஆரம்பப் பள்ளிகள் தேசியமயமாக்கப்படும் எனக் கூறியது.
எனினும், கத்தோலிக்கர் நடத்தும் ஏறக்குறைய 302 ஆரம்பப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் வராது என்றும், அவை முழு சுதந்திரத்தோடு செயல்படும் எனவும் அவ்வமைச்சகம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.