2013-01-10 15:31:55

கொத்தமங்கலம் சீரோ மலபார் ரீதி பேராயராக பேரருள்திரு George Madathikandathil நியமனம்


சன.10,2013. சீரோ மலபார் ரீதி ஆயர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில், கொத்தமங்கலம் பேராயராகப் பணியாற்றிய George Punnakottil ஒய்வு பெறுவதை ஏற்றுக்கொண்டதையும், அப்பணிக்கென பேரருள்திரு George Madathikandathil அவர்களைத் தேர்ந்தெடுத்ததையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள பேரருள்திரு George Madathikandathil, 1956ம் ஆண்டு Purapuzha எனுமிடத்தில் பிறந்தவர். தன் குருத்துவ பயிற்சியை முடித்தபின், இவர் 1980ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
உரோமையில் உள்ள கீழைரீதி பாப்பிறை நிறுவனத்தில் திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1990ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு முடிய Vadavathoor புனித தாமஸ் பாப்பிறைக் குருமடத்தில் பேராசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றினார்.
பேரருள்திரு George Madathikandathil மலையாளம், ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.








All the contents on this site are copyrighted ©.