நம்பிக்கை ஆண்டையொட்டி, இங்கிலாந்து ஆயர்கள் பேரவை வெளியிட்டு வரும்
வீடியோ குறும்படங்கள்
சன.09,2013. மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள விசுவாசத்தின் வழியாக இறைவனின் இருப்பை என்
வாழ்விலும் உணர்ந்துள்ளேன் என்று கர்தினால் Cormac Murphy O’Connor கூறினார். நடைபெற்றுவரும்
நம்பிக்கை ஆண்டையொட்டி, இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர்கள் பேரவை வெளியிட்டு வரும் வீடியோ குறும்படங்களில்
கர்தினால் O’Connor அளித்த பேட்டி இடம் பெற்றுள்ளது. குழந்தைப் பேறு இல்லாமல் வாடிய
ஒரு கத்தோலிக்கத் தம்பதியர் இடைவிடாமல் செபித்துவந்ததன் பலனாக, பத்தாண்டுகள் சென்று அவர்களுக்குக்
குழந்தைச் செல்வம் கிடைத்தபோதும், மாற்றுத் திறன் கொண்ட தன் மகளுக்காகப் பணிகள் செய்துவரும்
ஒரு தந்தையின் வாழ்வைக் கண்டபோதும் தனது நம்பிக்கை வளர்ந்ததாக கர்தினால் O’Connor விளக்கிக்
கூறினார். இங்கிலாந்து ஆயர் பேரவை வெளியிட்டு வரும் இக்குறும்படங்கள் வரிசையில் இதுவரை
Westminster பேராயர் Vincent Nichols, Middlesbrough ஆயர் Terence Drainey, Shrewsbury
ஆயர் Mark Davies ஆகியோரின் பேட்டிகள் இதுவரை இடம்பெற்றுள்ளன. இத்துடன், 2012ம் ஆண்டு
ஜூன் மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற அகில உலக திரு நற்கருணை மாநாட்டில்
பதிவான காட்சிகளும் இக்குறும்படங்கள் வழியே வெளியிடப்பட்டுள்ளன.