2013-01-09 15:58:26

அறிவியல் ஆய்வுகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - ILO அதிகாரி


சன.09,2013. சமூக வியல், மற்றும் கலைத் துறைகளில் பெண்களின் பங்கு அதிகம் இருப்பதுபோல், அறிவியல் துறைகளிலும், அறிவியல் ஆய்வுகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண்களின் அறிவுத் திறன் பற்றிய பாரம்பரியக் கருத்துக்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதால், அறிவியல் துறைகளில் பெண்களின் பங்கு அதிகம் இல்லை என்று ஐ.நா.வின் அங்கமாகிய அகில உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) அதிகாரி Claude Akpokavie கூறியுள்ளார்.
பெண்கள் மென்மையான துறைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது என்று ILO வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அறிவியல் துறைகளில் பெண்கள் தகுதியான பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றனர் என்று ILO அதிகாரி Akpokavie எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.