2013-01-08 16:09:14

செவ்வாய்க் கிரகத்தில் புதிய நகரம் கட்டுவதற்குத் திட்டம்


சன.08,2013. செவ்வாய்க் கிரகத்தில் எண்பதாயிரம் பேர் தங்கும் வகையில் நகரமொன்றை உருவாக்குவதற்கு SpaceX நிறுவனத்தின் தலைவர் Elon Musk திட்டமிட்டு வருகிறார்.
இந்தக் குடியேற்றம் பற்றி இலண்டன் Royal Aeronautical கழகத்தில் பேசிய Musk, அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
செவ்வாய்க் கிரகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 80,000 பேர் குடியேறுவார்கள். அவர்கள் அங்கு சுயச்சார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்காக, செவ்வாய்க் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களைத் தயாரிக்க வேண்டியுள்ளது. அத்துடன் விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் கூடிய "பால்கன்-9" என்ற விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 இலட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.