உலகில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி
சன.08,2013. தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி எடுத்துள்ள 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட
கத்தோலிக்கரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட நூல் ஒன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம்
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது குறித்துப் பேட்டியளித்த
அருள்தந்தை John Phalen, தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி எடுத்துள்ள உலகின் பல பாகங்களைச்
சேர்ந்த மக்களின் பெயர்கள், அவர்களின் கையெழுத்துக்களுடன் இந்த நூலில் உள்ளன என்று கூறினார். விசுவாசிகளைத்
தினமும் செபமாலை செபிக்கத் தூண்டும் முயற்சியானது, குடும்ப செபமாலை அமைப்பை உருவாக்கிய
இறையடியார் அருள்பணி Patrick Peyton என்பவரால் 1991ம் ஆண்டில், ஆரம்பிக்கப்பட்டது. குடும்பத்தில்
செபமாலை சொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 1942ம் ஆண்டில் குடும்ப செபமாலை
அமைப்பை உருவாக்கினார் இறையடியார் அருள்பணி Patrick Peyton.