2013-01-04 14:45:56

செக் குடியரசில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை


சன.04,2013. செக் குடியரசு சுதந்திரம் அடைந்ததன் இருபதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, அந்நாட்டில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஏறக்குறைய மூவாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரும் நாள்களில் நான்காயிரத்துக்கு அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
செக் குடியரசின் அரசுத்தலைவர் Vaclav Klaus வழங்கிய பொது மன்னிப்பில், ஓராண்டுக்குக் குறைவாக தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் பத்தாண்டுக்குக் குறைவான தண்டனை அனுபவித்த 75 வயதுக்கு மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அரசுத்தலைவர் Klaus வெளியிட்ட புத்தாண்டு அறிக்கையில், ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, நாடு சுதந்திரம் அடைந்ததன் இருபதாம் ஆண்டைச் சிறப்பிப்பதன் அடையாளமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்த குடியரசு 1993ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று செக் மற்றும் ஸ்லோவாக் குடியரசுகளாகப் பிரிந்தன.







All the contents on this site are copyrighted ©.