2013-01-04 14:42:46

ஓர் அருள்சகோதரியின் நூல் ஜப்பானில் அமோக வரவேற்பு


சன.04,2013. ஜப்பானில் 65 ஆண்டுகள் மறைப்பணியாற்றிய பின்னர் 96 வயதாகும் ஓர் அருள்சகோதரி எழுதியுள்ள நூல், அந்நாட்டில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
“புன்சிரிப்பு மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது” என்ற தலைப்பில் அருள்சகோதரி Jeanne Bosse எழுதியுள்ள நூல், நற்செய்தியின் அடிப்படையில் வாழும் முறையைச் செம்மைப்படுத்துவதற்கு உதவி வருகிறது.
இதுவரை நான்கு பதிப்புகளில் 19 ஆயிரம் நூல்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், ஜப்பானில் அதிக அளவில் விற்பனையாகும் Asahi Shimbun என்ற தினத்தாளும் இந்த நூல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது என ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உலகில் பொருளாதார வளமிக்க நாடுகளில் மூன்றாவதாக விளங்கும் ஜப்பானில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவு. அதேநேரம், தற்கொலைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.