2013-01-04 14:48:55

அனுமதியற்ற புதிய மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்தியாவில் தடை


சன.04,2013. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எவ்வித வரைமுறையுமின்றி தாங்கள் புதிதாக உருவாக்கும் மருந்துகளின் செயற்திறன் மற்றும் பக்கவிளைவுகளைப் பரிசோதனை செய்யும் வகையில் அதைப் பலவீனமானவர்களுக்கு கொடுத்து ஆய்வுகள் செய்து வருவதை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இனிமேல் அவ்வகையான எந்தச் சோதனைகளுக்கும் மத்திய நலவாழ்வுத்துறைச் செயலரின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கும் புதிய மருந்துகளின் செயற்திறன் மற்றும் பக்கவிளைவுகளைப் பரிசோதனை செய்வதைக் கண்காணிப்பதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்போவதாகக் கூறினார், இத்தகைய பரிசோதனைகளுக்கான அனைத்துலகச் சட்ட அமைப்பின் இந்தியத் தலைவர் சுதர்சன் நாச்சியப்பன்
இது தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகவும், அந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால், உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் பல ஆலோசனைகள் அந்தச் சட்டத்திற்குள் அடங்கியிருக்கும் என்றும் சுதர்சன நம்பிக்கை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.