2013-01-02 15:45:08

2012ம் ஆண்டில் 12 திருப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - Fides அறிக்கை


சன.02,2013. கடந்து சென்ற 2012ம் ஆண்டில் 12 திருப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் Fides செய்தி நிறுவனம் வெளியிடும் இத்தகவலின்படி, கடந்த ஆண்டு 10 அருள்பணி யாளர்கள், ஒரு அருள் சகோதரி மற்றும் அருள் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொது நிலையினர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட பன்னிருவரில், ஆறுபேர் லத்தீன் அமெரிக்காவிலும், நான்கு பேர் ஆப்ரிக்காவிலும், இருவர் ஆசியாவிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வருள் பணியாளர்களின் கொலைகள் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும், இவர்கள் அனைவரும் அமைதியான முறையில் தங்கள் விசுவாசத்திற்கு சான்று பகர்ந்துள்ளனர் என்றும் Fides அறிக்கை மேலும் கூறுகிறது.
கொல்லப்பட்ட திருப்பணியாளர்களை மறைசாட்சிகள் என்று தீர்மானிப்பது திருஅவையின் பொறுப்பு என்று கூறும் இவ்வறிக்கை, இவர்கள் கொல்லப்பட்டச் சூழலின் அடிப்படையில் இத்தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.