ஒவ்வொரு நாள் ஒலிபரப்பிலும் முதல் ஒரு நிமிடம் குறுந்தகவல்களுடன் உங்களோடு உரையாடி நிகழ்ச்சியைத்
துவக்குவது நம் வழக்கமாக இருந்துவந்துள்ளது. கடந்த ஆண்டுகளில்... இன்றொரு குறள், புனிதர்கள்
பாதையில், நாளுமொரு நல்லெண்ணம், வாழ்ந்தவர் வழியில், கவிதைக் கனவுகள் என்று நாங்கள் வழங்கிவந்த
நிகழ்ச்சிகளின் ஒரு தொடர் முயற்சியாக இன்று ஆரம்பமாகிறது.... கற்றனைத் தூறும்... "தொட்டனைத்
தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு." என்று வள்ளுவப் பெருந்தகை
சொல்லிச் சென்ற அறிவுரைக்கேற்ப, இன்று முதல் உங்களை வந்தடைவது... 'கற்றனைத் தூறும்'.
பல்வேறு பொதுஅறிவு ஊற்றுக்களிலிருந்து நாங்கள் திரட்டும் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறோம். பயனுள்ளதொரு முயற்சியாக இது அமையுமென நாங்கள் நம்புகிறோம். இந்நிகழ்ச்சியைக்
கேட்டு, உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். கற்றனைத் தூறட்டும் நம் அறிவு!