2012-12-29 15:01:13

சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அலெப்போ ஆயர் அழைப்பு


டிச.29,2012. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையினால் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டிருக்கும் சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அலெப்போ நகர் கல்தேயரீதி ஆயர் Antoine Audo.
வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கேட்டுள்ள ஆயர் Audo, ஏழைகளுக்காகச் செபித்து அவர்களுக்குச் சேவை செய்யும்போது, கிறிஸ்தவர்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியிலும் மகிழ்ச்சியிலும் வாழ முடியும் என்று கூறினார்.
கஷ்டமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் அலெப்போ தலத்திருஅவை, ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் காரித்தாஸ் மற்றும்பிற பிறரன்பு நிறுவனங்கள் மூலம் உதவி செய்து வருகிறது என்றும் ஆயர் கூறினார்.
தற்போது அலெப்போ கடும் குளிராக இருப்பதால் எரிபொருள் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்றும், சுமார் இரண்டாயிரம் கிறிஸ்தவக் குடும்பங்கள் அலெப்போவிலிருந்து லெபனன் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.